search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிர் காடு"

    குஜராத்தில் உள்ள கிர் வனப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் கடந்த 3 வாரங்களில் மட்டும் 21 சிங்கங்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #Girforest
    அகமதாபாத் :

    குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் வனப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஆசிய சிங்கங்கள் இருக்கின்றன. இந்த சிங்கங்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதால் இதை அழிந்துவரும் இனங்களில் ஒன்றாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ளது.

    இதற்கிடையே, இந்த வனப்பகுதியில் கடந்த மாதம் 12-ம் தேதி முதல் 19-ம் தேதி வரையிலான இடைப்பட்ட காலத்தில் 11 சிங்கங்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் உயிரிழந்தது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, அடுத்த சில தினங்களில் மேலும் 3 சிங்கள் உயிரிழந்தன.

    இந்நிலையில், கிர் வனப்பகுதியின் தல்கானியா பகுதியில் நோய்வாய்பட்ட நிலையில் இருந்த 7 சிங்கங்கள் மீட்கப்பட்டு வனத்துறை மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தன. ஆனால், அந்த 7 சிங்கங்களும் நேற்று திடீரென உயிரிழந்தது. இதனால் பலியான சிங்கங்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.

    உயிரிழந்த சிங்கங்களை பரிசோதனை செய்ததில் வைரஸ் தாக்குதல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், இது என்ன வகையான வைரஸ்? எப்படி திடீரென சிங்கங்களை தாக்கியது ? என்பது பற்றி தெரியவில்லை, தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம் என தலைமை மருத்துவர் டி.டி.வசவாடா தெரிவித்துள்ளார்.

    இருப்பினும், நோய் வாய்ப்பட்ட சிங்கங்களை மீட்க்கும் நடவடிக்கையின் போது எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் கிர் வனப்பகுதியில் உள்ள சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. முன்னர் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 523 ஆக இருந்த சிங்கங்களின் எண்ணிக்கை தற்போது 600 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #Girforest
    குஜராத்தில் உள்ள கிர் வனப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் கடந்த 10 நாட்களில் மட்டும் 11 சிங்கங்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #Girforest
    அகமதாபாத் :

    குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் காட்டில் நூற்றுக்கணக்கான ஆசிய சிங்கங்கள் இருக்கின்றன. இந்த சிங்கங்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதால் இதை அழிந்துவரும் இனங்களில் ஒன்றாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில், இந்த வனப்பகுதியில் கடந்த 10 நாட்களில் மட்டும் 11 சிங்கங்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் உயிரிழந்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக கிர் வனத்துறையை சேர்ந்த கால்நடை மருத்துவர் வம்ஜா கூறுகையில், உயிரிழந்த சிங்கள் அனைத்தும் நுரையீரல் சார்ந்த நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

    இருப்பினும், இந்த திடீர் நோய் தொற்று எதனால் ஏற்பட்டது என தெரியவில்லை. மீதம் உள்ள சிங்கங்ளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நோய் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். #Girforest
    ×